மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொவிட்-19 நோயாளிகளில் பாதி பேருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு நோய் அறிகுறியாவது இருந்து வருகிறது.
பிரிட்டனின் 'தி லான்செட்' மருத்துவ சஞ்சிகையில் வெளியான புதிய ஆய்வு இதைக் கூறியுள்ளது.
பொதுவாக கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தோரின் உடல்நலம் சுமார் ஈராண்டுகளுக்குப் பிறகும் சற்று குன்றியிருந்ததாக அந்த ஆய்வின் முடிவுகள் குறிப்பிட்டுள்ளன.
அவர்களில் கணிசமானவர்களுக்கு உடல் உறுப்புகளிலும் உடல் இயக்கத்திலும் நீண்டகால பாதிப்பு இருந்ததாக அந்த ஆய்வு காட்டியது.
அதனால் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒருவர் எப்போது முழுமையாக குணம் அடைவார் என்பதை கண்டுபிடிக்க உடனடி ஆய்வுகள் தேவை என்று தி லான்செட் கூறியது.
சீனாவின் வூஹான் நகரில் கிருமிப் பரவல் தொடங்கிய முதல் சில மாதங்களில் பாதிக்கப்பட்ட 1,192 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்நகரில்தான் கொவிட்-19 கிருமி முதலில் தலைதூக்கியது.