இந்திய அரசாங்கம் இலங்கைக்கு மனிதாபிமான உதவி அனுப்பியுள்ளது, 25 டன் மருந்து, 9,000 டன் அரிசி, 50 டன் பால் மாவு ஆகியவை உதவிப் பொருள்களில் அடங்கும்.
தலைநகர் கொழும்பை நேற்று உதவி வந்தடைந்தது.
இலங்ககை வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல் பெரிஸ் உதவிப் பொருள்களைப் பெற்றுகொண்டார்.
“இந்திய அரசாங்கம் எந்த நாட்டுக்கும் இந்த அளவுக்கு உதவி வழங்கியதில்லை. இதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துகொள்கிறோம்,” என அவர் கூறினார்.