கிருமித் தொற்று காலக்கட்டத்தில் மனநல பாதிப்பு அதிகரித்தது

கொவிட்-19 கிருமித் தொற்று பரவத்தொடங்கிய முதல் ஆண்டில் உலக மக்களிடையே மன அழுத்தமும், பதற்றமும் 25 விழுக்காடு அதிகரித்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக பெண்கள், இளம் வயதினர், ஏற்கெனவே மனநோய் உள்ளவர்கள் ஆகிய தரப்பினர் வெகுவாக பாதிக்கப்பட்டதாக அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருமித் தொற்றால் சுகாதாரம், பொருளியல், சமூகங்கள் ஆகியவற்றில் நீண்டக்கால பாதிப்புகள் இருக்கும் என்றும், கொவிட்-19 பல தலைமுறைகள் கண்டிடாத ஆக மோசமான நெருக்கடி என்றும் அமைப்பு கூறியது.

உலகில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பேர் ஏதோ ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு வயதில் நடக்கும் பாலியல் கொடுமை, அதிகாரத்தைக் கொண்டு ஒருவரை கொடுமைப்படுத்துவது ஆகியவை மனநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

உலக நாடுகள் மனநல சுகாதாரத்தில் கவனம் செலுத்தவேண்டும் என அமைப்பு கேட்டுகொண்டது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உலக சுகாதார அமைப்பு அதன் அறிக்கையில் வலியுறுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!