நியூசிலாந்தில் கத்திக்குத்து சம்பவம்: நால்வர் காயம்

நியூசிலாந்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களை குத்த ஆடவர் ஒருவர் முயன்றார். அவரைப் பொதுமக்கள் சிலர் வலைத்துப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஆக்லாந்து தெருக்களில் ஒரு பெரிய கத்தியுடன் சுற்றித் திரிந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். சில பொதுமக்கள் அவரைப் பின்தொடர்ந்து, தக்க சமயத்தில் அவரை வலைத்துப் பிடித்ததாகக் கூறப்பட்டது. இதில் சந்தேக நபருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகக் காவல் துறை குறிப்பிட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிகிறது.

தாக்குதலுக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

துணிச்சலுடன் சந்தேக நபரை பிடித்த பொதுமக்களை காவல் துறையினர் பாராட்டினர்.

சென்றாண்டு நியூசிலாந்தில் இரண்டு கத்திக் குத்து சம்பவங்கள் நடந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!