பெட்டாலிங் ஜெயா: மலேசிய விசா விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய இலங்கை நாட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் படுகின்றனர். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 20 இலங்கை நாட்டவர்கள் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
வேலைக்கான விசா கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சுற்றுலா விசாவில் மலேசியாவில் இலங்கை நாட்டவர்கள் அதிகம் இருப்பது குறித்து ஆள்கடத்தலுக்கு எதிரான பணிக்குழுவிற்குத் தெரியப்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சு சொன்னதாக டெய்லி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவிற்கு சென்ற பிறகுதான் வேலை வாங்கித் தருவதாக கூறிய முகவர்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை அவர்கள் அறிவதாகவும் விசா இல்லாததால் மிகக் குறைவான சம்பளமும் கடினமான வேலைகளும் கொடுக் கப்படுவதாகவும் கூறப்படுகி
றது.
இந்நிலையில், வருகையாளர் விசா வைத்திருப்பவர்களை ஆய்வு செய்ய மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.