ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காபூலின் மேற்குப் பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
அங்கு இஸ்லாமிய சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஷியா சமூகத்தினர் அடிக்கடி ஒன்றுகூடுவதுண்டு.
இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.