காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இஸ்லாமிய சிறுபான்மையின ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர்கள், நபிகள் நாயகத்தின் பேரனாக கருதப்படும் ஹுசைன் அவர்களின் விழாவை அனுசரிக்க ஒன்றுகூடிய இடத்தில் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சன்னி முஸ்லீம் பிரிவின் தீவிரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு, சிறுபான்மையினரைக் குறிவைத்து, அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.