இலங்கையில் கோத்தபாயவிற்கு அரசாங்க இல்லம், பாதுகாப்பு

கொழும்பு: இலங்­கை­யி­லி­ருந்து தப்பி­யோடி, கிட்­டத்­தட்ட இரண்டு மாதங்­க­ளுக்­குப் பிறகு நாடு திரும்­பிய முன்­னாள் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­வுக்கு தற்­போ­தைய அர­சாங்­கம் அதி­கா­ர­பூர்வ இல்­லத்­தை­யும் பாது­காப்­பை­யும் வழங்­கி­ உள்ளது.

நேற்று முன்­தி­னம் இரவு இலங்கையின் கொழும்­பில் உள்ள பண்­டா­ர­நா­யகா அனைத்­து­லக விமான நிலை­யத்­தை அடைந்த கோத்­த­பா­ய­வுக்கு அமைச்­சர்­கள் சிறப்­பான வர­வேற்பு அளித்­த­னர்.

பின்­னர் அர­சாங்க இல்­லத்­திற்­குச் சென்ற கோத்­த­பாய, பாது­காப்பு கருதி அறையை விட்­டுச் செல்­வ­தற்­குக்­கூட அனு­ம­திக்­கப்­ப­டவில்லை என அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கோத்­த­பா­ய­வைப் பார்ப்­ப­தற்கு நேற்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல­ரும் சென்­ற­னர். முன்­னாள் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்­சே­வும் தமது தம்­பி­யான கோத்­த­பா­யவை நேரில் சென்று பார்த்­தார்.

இந்­நி­லை­யில், கோத்­த­பா­யவை அர­சாங்­கம் கைது செய்ய வேண்­டும் என்று இலங்கை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கூறி­னர்.

பொரு­ளி­யல் சரிவு கார­ண­மாக கொந்­த­ளித்த மக்­கள், அதி­பர் மாளி­கையை சூழ்ந்­த­வு­டன் கோத்­த­பாய ஜூலை 13ஆம் தேதி மாலத்­தீவுக்குத் தப்­பிச் சென்­றார்.

அங்கிருந்து சுற்­றுப்­ப­யண விசா வில் சிங்­கப்­பூர் வந்த அவர், பிறகு பேங்­காக் சென்­றார். இப்­போது நாடு திரும்பியுள்ள அவர், அர­சியல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்து அமோக வர­வேற்­பைப் பெற்­றுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!