வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.
வடகொரியா இந்த ஆண்டு தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இது பதிலடியாக அமையும் என்பது வட கொரியாவுன் நம்பிக்கை
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.
இந்நிலையில், வட கொரியா மேலும் ஒரு 'பாலிஸ்டிக்' ஏவுகணையைப் பாய்ச்சி சோதனை நடத்தியது என ஜப்பான் தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவை விட்டு நேற்று வெளியேறிய சில மணி நேரங்களுக்குள் வடகொரியா 2 'பாலிஸ்டிக்' ஏவுகணைகளை ஏவியுள்ளது.