60 ஆண்டுகள் கழித்து வானில் ஒரு அதிசய நிகழ்வு அண்மையில் தென்பட்டது. கோள்களில் ஆகப் பெரிய கோளான வியாழன் பூமிக்கு மிக அருகில் ஒரு நேர்க்கோட்டில் வந்தது. இதுபோன்ற நிகழ்வு கடைசியாக 1963ல் நடந்தது.
சூரியனுக்கு எதிரே தோன்றுகிறது வியாழன் கோள். இவற்றுக்கு நடுவே உள்ளது பூமி. செப்டம்ர் 26ஆம் தேதி அன்று மூன்று கோள்களும் ஒரு நேர்க்கோட்டில் தென்பட்டன.
இந்த நிகழ்வின்போது, வியாழன் பூமியிலிருந்து 590 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இந்த நிகழ்வை பார்க்க சிங்கப்பூரின் பல இடங்களில் ஆர்வலர்கள் கூடினர். தொலைநோக்கு கருவி மூலம் வியாழன் கோளின் அம்சங்கள் தெளிவாக தெரிந்தன.
வழக்கமாக சூரியன் மறைந்த பின்னர், வானில் மிக ஒளிமையமாக தோன்றுகிறது வியாழன் கோள். பலரை இதை நட்சத்திரம் என்று தவறாக நினைத்துகொள்கின்றனர்.
இந்த ஆண்டு இறதிவரை இரவு நேரத்தில் வியாழன் கோள் மிக பிரகாசமாக தென்படும் எனக் கூறப்பட்டது. இந்த நிகழ்வை சூரியன் மறைந்த பின்னர் கிழக்கு திசையில் பார்க்கலாம்.