லண்டன்: அண்மையில் பிரதமர் பொறுப்பு ஏற்ற லிஸ் டிரஸ் அறிவித்துள்ள வரிக் குறைப்பு பொருளியல் நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் தமது பொருளியல் திட்டம் தொடர்வது அவசியம் என்று நேற்று அவர் தெரிவித்தார்.
நிதி ஒதுக்கப்படாத வரிக் குறைப்புக்கு அடிப்படை தளத்தை அமைத்து சிறப்பாகச் செய்திருக்க முடியும். இருந்தாலும் தொடர்ந்து அதனை அமலாக்குவது நல்லது என்று லிஸ் டிரஸ் கூறினார்.
இங்கிலாந்து பதற்றமான பொருளியல் சூழலை எதிர்நோக்குவதை ஒப்புக்கொண்ட அவர், உயர் வளர்ச்சி, குறைந்த வரி பொருளியலுக்கு தமது திட்டம் இட்டுச் செல்லும் என்றார்.
இருந்தாலும் லிஸ் டிரஸ்ஸின் பொருளியல் திட்டம் அவரது கன்சர்வேட்டிவ் கட்சியினரை கவலை அடைய செய்துள்ளது. மேலும் பிரிட்டிஷ் பவுண்ட் வீழ்ச்சியடைந்தது. உலக முழுவதும் பங்குச் சந்தையில் பவுண்டின் வீழ்ச்சி எதிரொலித்தது.
மத்திய இங்கிலாந்து நகரமான பர்மிங்ஹமில் நேற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் நான்கு நாள் மாநாடு தொடங்கிய வேளையில் டிரஸ்ஸின் கருத்து வெளியாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் பதவியை ஏற்ற லிஸ் டிரஸ், பல ஆண்டுகால பிரிட்டனின் மந்த மான பொருளியலுக்கு முடிவுகட்ட பொருளியல் திட்டங்களை மறு வடி வமைக்கப்போவதாகக் கூறியிருந் தார்.
ஆனால் செப்டம்பர் 23ஆம் தேதி அரசாங்கம் அறிவித்த 45 பில்லியன் பவுண்ட் வரிக்குறைப்பை உள்ள டக்கிய பொருளியலைத் தூண்டும் திட்டத் துக்கு அரசாங்கம் கடன் வாங்கித்தான் ஈடுகட்ட முடியும்.
இதனால் பவுண்டின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு யுஎஸ் டாலருக்கு எதிராக கடும் வீழ்ச்சியடைந்தது.
அதிக வருமானம் உள்ளவர் களுக்கு வரிக்குறைப்பு செய்தது தவறானது, அதை மாற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மிஷல் கோவ் தெரிவித்துள்ளார்.