சோல்: தென்கொரியாவில் பெண் குழந்தையின் சடலம் பிளாஸ்டிக் கொள்கலனில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதன் பெற்றோரிடம் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
15 மாதக் குழந்தையின் சடலத்தை அதன் பெற்றோர் மூன்று ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்ததாகக் காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.
குழந்தையின் 29 வயது தந்தை, சிறையில் இருந்தபோது அதன் 34 வயது தாயார் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் என்று நம்பப்படுகிறது.
குழந்தை இறந்ததும் சடலத்தை அதன் தாயார் வீட்டிலேயே வைத்திருந்தார்.
சிறையிலிருந்து விடுதலையான குழந்தையின் தந்தை, சடலத்தை வேறு மாநிலத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் மறைத்து வைத்தார்.
கிம்ச்சி வைப்பதற்கான கொள்கலனில் 15 மாதக் குழந்தையை வைத்து, அதை பரணில் மறைத்து வைத்தார்.
கிம்ச்சி, தென் கொரியர்களின் ஊறுகாயாகக் கருதப்படுகிறது.
குழந்தையை யாரும் பாலர்
பள்ளியில் சேர்க்கவில்லை என்
பதும் அதை மருத்துவப் பரி
சோதனைகளுக்கு அழைத்துச் செல்லவில்லை என்பதும் உள்ளூர் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.
சந்தேகத்தின் பேரில் காவல்
துறையில் புகார் அளிக்கப்பட்டது.
குழந்தையின் தாயாரைக் கைது செய்து அதிகாரிகள் விசாரித்தனர். முதலில், குழந்தையைத் தெருவில் விட்டுச்சென்று விட்டதாகக் கூறிய அப்பெண், பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார். குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.