சிட்னி: பாலியில் குண்டு வைத்த உமர் பதெக் விடுவிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
2002ல் பாலியில் உள்ள இரண்டு இரவு கேளிக்கை விடுதிகளில் குண்டு வெடித்ததில் தாங்கள்தான் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறோம் என்று உயிர் பிழைத்த சிலர் கூறியுள்ளனர்.
“என் வாழ்க்கையே திசை மாறி விட்டது,” என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஆஸ்திரேலியரான ஆண்ட்ரு ஸாபி தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பில் திரு ஸாபியின் நண்பர்கள் கொல்லப்பட்டதோடு அவரது கால்களும் துண்டிக்கப்பட்டன.
கடந்த புதன்கிழமை குண்டு வெடிப்புக்கு காரணமான உமர் பதெக் இந்தோனீசிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அவர் தீவிரச் சித்தாந்தத்திலிருந்து மாறிவிட்டதாக இந்தோனீசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2002ல் அக்டோபர் 12ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 21 நாடுகளைச் சேர்ந்த 202 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் 88 பேர் ஆஸ்திரே லியர்கள்.
ஜமா இஸ்லாமியா அமைப்புக்கு குண்டு தயாரித்துக் கொடுத்ததாக பதெக் மீது குற்றம் சாட்டப்பட்டது. பத்து ஆண்டுகளாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
2012ல் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் பாதிக்கும் சற்று கூடுதலாக அவர் அனுபவித்துள்ளார்.
இந்தோனீசிய அதிகாரிகள், பதெக் இனி அச்சுறுத்தலாக இல்லை என்றும் நல்ல நடத்தைக்காக தொடர்ச்சியாக தண்டனை குறைக்கப்பட்டு விடுதலைக்கு அவர் தகுதி பெற்றார் என்றும் கூறிஉள்ளனர்.
ஆனால் குண்டுவெடிப்பில் ஐந்து நண்பர்களை இழந்த மற்றோர் ஆஸ் திரேலியரான ஜான் லாசின்ஸ்கி, அதிர்ச்சியும் கோபமும் அடைந்ததாகக் கூறினார்.
“இவன் மீண்டும் தனது வாழ்க்கைக்குத் திரும்பியிருக் கிறான். எங்களில் பலருக்கு மீண்டும் எங்கள் வாழ்க்கையைத் திரும்பப் பெற முடியாது,” என்று அவர் வியாழக்கிழமை பிபிசியிடம் தெரிவித்தார்.
“இது பயங்கரமான தவறான செயல்,” என்று அவர் குறிப்பிட்டார்.