சிட்னி: ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களின் கட்டணம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் அதற்கு கடிவாளம் போடும் வகையில் மலிவுக்கட்டண விமான நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பயனீட்டாளர் கண்காணிப்பு அமைப்பான ஆஸ்திரேலியாவின் போட்டித்திறன், பயனீட்டாளர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்டோபரில் உள்ளூர் விமானக் கட்டடங்கள், கொள்ளைநோய்க்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 27 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அபாயச் சங்கு ஊதியுள்ளது.
விலை குறைவாக கழிவு விலையில் வழங்கப்படும் பொது விமானக் கட்டணமும் ஏப்ரலில் இருந்து இரண்டு மடங்குக்கு கூடியுள்ளது.
தொற்றுநோய்க்கு முன்பு உலகின் இரண்டாவது பரபரப்பான உள்நாட்டு வழித்தடமாக இருந்த சிட்னியிலிருந்து மெல்பர்னுக்கு தற்போது பயணிகள் ஒருவழி பயணத்திற்கு மட்டும் 700 ஆஸ்திரேலிய டாலர் வரை செலுத்து வதாக தெரிவித்துள்ளனர்.
விமானத் தரவு நிறுவனமான ‘ஓஏஜி’ கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் உள்ள சோல் முதல் ஜெஜு வரை மட்டுமே பரபரப்பான உள்நாட்டு வழித்தடமாக இருந்தது.
இந்த நிலையில் கைக்கு எட்டாத கட்டணங்களைத் தவிர்க்க பயணங்களைத் தவிர்க்க வேண்டும் அல்லது உச்சநேரத்தில் பயணம் செய்யக்கூடாது என்று நிறுவனங்களும் பயணிகளும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தி உள்ளது. உள்நாட்டு விமான நிறுவனங்களின் கட்டணத்தை கண்காணிக்கப் போவதாகவும் அது கூறியுள்ளது.