நைரோபி: கென்யாவின் கடலோர நகரான மலிண்டிக்கு அருகே அதிகாரிகள் குறைந்தது 47 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
மாண்டோரில் சிறுவர்களும் அடங்குவர்.
இவர்கள் சமயம் சார்ந்த காரணங்களுக்காக ஷாக்காஹோலா எனும் வனப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்து மாண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவ்வாறு செய்யத் தூண்டியதாகக் கூறப்படும் சமயத் தலைவர்மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

