உல‌க‌ம்

சிட்னி: சிட்னியில் உள்ள தேவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் தேதியன்று கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் தேவாலயத்தின் பேராயர் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.
பெட்டாலிங் ஜெயா: இந்தோனீசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடிப்புக் காரணமாக மலேசியா, சாபா, சரவாக் ஆகியவற்றுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகும் என மலேசிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலம் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் ஆக அதிகப் பொருளியல் வளர்ச்சி பெற்ற மாநிலமாக விளங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
வாஷிங்டன்: இஸ்‌ரேல் பாய்ச்சிய ஏவுகணைகள் ஈரானைத் தாக்கியதாக, ஏப்ரல் 18ஆம் தேதி பின்னிரவில் ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெலிங்டன்: நியூசிலாந்தில் மேய்ச்சல் நிலப் பகுதியில் முதிய தம்பதியைத் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் ஆட்டைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.