உல‌க‌ம்

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று துப்பாக்கிச்சூடு நடத்தியவர் எனச் சந்தேகிக்கப்படும் 38 வயது ஹஃபிசுல் ஹராவியை ஏழு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைத்திருக்க கிளந்தான் மாநில கோத்தா பாரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து பல அமைப்புகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சிட்னி: சிட்னியில் உள்ள தேவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் தேதியன்று கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் தேவாலயத்தின் பேராயர் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.
சிட்னி: மேற்கு சிட்னியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஆடவர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.
மணிலா: முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேயை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐசிசி) தாம் ஒப்படைக்கப்போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் கூறியுள்ளார்.