அறிவொளி ஏற்றும் ஆசிரியர் பணி மகத்தானது. மாணவர்களுக்கிடையே மொழி ஆர்வத்தை தூண்ட தூண்களாக நிற்கும் தமிழ்மொழி ஆசிரியர்களை அங்கீகரித்து சிறப்பிக்கிறது ஆண்டுதோறும் நடைபெறும் ‘நல்லாசிரியர் விருது’ விழா.
தமிழ் முரசு நாளிதழும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் இணைந்து வழங்கும் இவ்விருது விழாவில் நல்லாசிரியர் விருதுகளைப் பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைச் சிறப்பிக்கிறது இந்த வார மாணவர் முரசு.
‘நல்லாசிரியர் விருது 2024’ விழா உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 21) சிறப்பாக நடைபெற்றது.