மின்னும் லிட்டில் இந்தியா: பொங்கல் விழா கொண்டாட்டம்!

1 mins read
c252461d-d4a9-40b9-bbdc-f4dc3cfb95f9
தேக்கா பிளேஸ் முதல் பெருமாள் கோவில் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வண்ண விளக்குகள் மின்னுகின்றன. - படம்: லிஷா ஃபேஸ்புக்

‘லிட்டில் இந்தியா’ பகுதி இப்போது வண்ண விளக்குகளால் மின்னுகிறது. தமிழர் திருநாளான பொங்கலை வரவேற்க, சனிக்கிழமை (ஜனவரி 10) அன்று ஒரு பிரம்மாண்டமான விழா நடைபெற்றது.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

கிளைவ் ஸ்திரீட்டில் பறை இசை, உறுமி மேளம் முழங்க, ஆடல் பாடலோடு விழா களைகட்டியது.

விழாவில் சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விழாவில் சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: சுந்தர நடராஜ்

மாடுகளை நேரில் பார்க்க வருகை

பொங்கல் என்றாலே மாடுகள் இல்லாமலா? விழாவிற்கு ஒரு நாள் முன்னதாகவே மாடுகள் (வெள்ளிக்கிழமை), ‘பொலி’ (Poli) இடத்திற்கு வந்து சேர்ந்தன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அந்த மாடுகளைப் பார்த்து ரசித்தனர்.

தேக்கா சாலையை வலம் வந்த மாடுகள்.
தேக்கா சாலையை வலம் வந்த மாடுகள். - படம்: லிஷா முகநூல்

மின்னும் விளக்குகள்

தேக்கா பிளேஸ் முதல் பெருமாள் கோவில் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வண்ண விளக்குகள் மின்னுகின்றன. இரவில் பார்க்கும்போது அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. பிப்ரவரி 8ஆம் தேதி வரை பொதுமக்கள் பொங்கல் ஒளியூட்டைக் கண்டு ரசிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்