பிடோக் ரெசர்வாயர் வட்டாரத்தில் அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வதற்காக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வட்டாரவாசிகள் சிலர் உருவாக்கினர்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்களும் செயற்கைப் பனிமழையும் சூழ சிறுவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று ஒன்றுகூடி ஓடியாடி மகிழ்ந்தனர்.
அக்காலத்துக் கிராமத்து உணர்வை இன்றைய மக்களுக்கு உணர்த்துவதற்கு இதுபோன்ற அடுக்குமாடி கீழ்த்தளக் கொண்டாட்டங்கள் உதவும் என்றனர் அதன் ஏற்பாட்டாளர்கள்.

