சூரிய மின்னாற்றல் உதவியுடன் இயங்கும் சிங்கப்பூரின் முதல் ரமலான் சந்தை, பிடோக்கில் திறக்கப்பட்டு இருக்கிறது. பல சிறுவர்களும் இங்கு வந்து பொழுதை இனிதாகக் கழிக்கின்றனர்.
சூரிய மின்னாற்றலால் இயங்கும் அலங்கார விளக்குகள், சுற்றிலும் மறுசுழற்சித் தொட்டிகள், மண்ணைப் பயன்படுத்தாமல் வளரக்கூடிய செடிகள், நீடித்த நிலைத்தன்மை சார்ந்த பயிலரங்குகள் போன்ற அங்கங்களால் இச்சந்தை ‘இகோ-ஹார்மனி விழா’ என்று அழைக்கப்படுகிறது.
பிப்ரவரி 20 தொடங்கி, ஏப்ரல் 9 வரை நோன்புப் பெருநாளுக்காக இந்த சந்தை திறந்திருக்கும்.
பக்கம் 6-7ல் மேலும் செய்திகள்