நெளிந்து ஆடும் மரங்கொத்தி: குழந்தைகள் செய்ய எளிய கைவினை செய்முறை

நெளிந்து ஆடும் மரங்கொத்தி: குழந்தைகள் செய்ய எளிய கைவினை செய்முறை

1 mins read
c6cddc20-a402-45dc-88d4-9e2870aee45f
நெளிந்து ஆடும் மரங்கொத்தி தயார். - படங்கள்: தமிழ்முரசு

கைவினை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமன்று, அது ஒருவரின் ஆளுமையையும் திறமையையும் செதுக்கும் கலை. அதைச் செய்து முடிக்கும்போது, ஒரு படைப்பாளியாக நீங்கள் அடையும் மகிழ்ச்சி தனித்துவமானது. எனவே, அக்கலையை நாமும் கற்று, மகிழ்ச்சி அடைவோம் பிள்ளைகளே! !

தேவையான பொருள்கள்

1. காகித அட்டை

2. கத்தரிக்கோல்

3. வண்ணக் காகிதங்கள்

4. பசை

5. கம்பளி நூல்

6. பற்குச்சி

7. வண்ணம் தீட்டுவதற்கானப் பொருள்கள்

செய்முறை

  • காகித அட்டையில் மரங்கொத்திப் பறவை ஒன்றை வரைந்து, வண்ணம் தீட்டுங்கள்.
  • கத்தரிக்கோலைப் பயன்படுத்தி, வண்ணம் தீட்டப்பட்ட மரங்கொத்தியை அதன் வடிவத்திற்கு ஏற்ப வெட்டி எடுங்கள்.
  • படத்தில் இருப்பதுபோன்று, இரு கறுப்பு நிறக் காகிதங்களை மடித்துக்கொள்ளுங்கள்.
  • காகிதக் குவளையின்மீது வண்ணக் காகிதத்தை ஒட்டி, பின்னர் அதில் ஒரு துளையிடுங்கள். படி 4ல் செய்த கறுப்பு நிறக் காகித வடிவத்தின் ஒரு பகுதியைக் குவளைமீதும் மறுபகுதியைப் பறவைமீதும் ஒட்டுங்கள்.
  • பற்குச்சியைப் பயன்படுத்தி அந்தப் பறவைக்கு அலகு வையுங்கள்.
  • கம்பளி நூலின் ஒரு பகுதியைப் பறவைமீதும் மறுபகுதியைக் குவளையில் துளையிட்டும் கோக்கவும். குவளைப் பக்கம் இருக்கும் நூலை இழுத்தால் நெளிந்து ஆடும் மரங்கொத்தி தயார்!
நிலை 1.
நிலை 1. -
நிலை 2.
நிலை 2. -
நிலை 3.
நிலை 3. -
நிலை 4.
நிலை 4. -
நிலை 5.
நிலை 5. -
நிலை 6.
நிலை 6. -
குறிப்புச் சொற்கள்
பறவைகைவினைபயன்படுத்திய பொருள்கள்