சமூக ஊடகத்தில் கதாநாயகனைப் புகழ்ந்த ஊர்வசி: விமர்சித்த ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஊர்வசி ரௌடேலா, ஜூனியர் என்டி ஆருடன் இணைந்து நடிக்கிறார்.

தமிழில் ‘லெஜன்ட்’ படத்தில் நாயகியாக நடித்த பின்னர் அவருக்கு கோடம்பாக்கத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில் தெலுங்கில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஊர்வசி. இப்படத்துக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இதற்காக அங்கு தங்கியுள்ள ஊர்வசி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று திரும்புகிறார்.

அப்போது ஒருமுறை ஜூனி யர் என்டிஆரைச் சந்தித்தாராம். அவரது எளிமை, நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்ட பல அம்சங்கள் தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளது என சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“எதையும் முகத்துக்கு நேராகப் பேசுகிறார் ஜூனியர் என்டிஆர். அவர் சிங்கத்தின் இதயம் கொண்ட நல்ல மனிதர். “உங்களுடன் இணைந்து பணியாற்ற நீண்ட நாள்களாகக் காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் ஊர்வசி.

இதையடுத்து சமூக ஊடகம் மூலம் முன்னணி நாயகர்களுக்கு அவர் தூது விடுவதாகப் பலர் விமர்சித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!