சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரின் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட வட்டார மையமாக தெம்பனிஸ் விளங்குவதாக புதிய நூல் ஒன்றில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவின் பாலித் தீவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) புறப்பட்ட ஸ்கூட் விமானம் ஒன்றில் புகை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சாங்கி விமான நிலையத்திற்கு அது திரும்பியது.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தனது உறுப்பினர் எண்ணிக்கையை கடந்த 3 ஆண்டுகளில் 30 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று புதன்கிழமை (மே 1ஆம் தேதி) அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.
பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான அரசாங்கம், ஊழியர்களின் தேவைகளையும் அக்கறைகளையும் கையாண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) தலைவர் கே.தனலெட்சுமி பாராட்டியுள்ளார்.
சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் சில நகரங்களில் பெய்துவரும் கனமழை காரணமாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் அப்பகுதிகளிலிருந்து புறப்படுவதற்கு நீண்ட தாமதத்தை எதிர்கொண்டன.