வாழ்வும் வளமும்

வாரத்தில் தனக்குக் கிடைப்பது ஒரு நாள் ஓய்வுதான். அப்போதும் வயதான நோயாளிகளைப் பராமரிக்க டான் டோக் செங் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த பராமரிப்பு மையத்திற்குச் (ஐசிஹெச்) செல்கிறார் இந்தோனீசிய பணிப்பெண் திருவாட்டி ஹண்டாயனி, 38.
பகுதிநேர டெலிவரூ ஓட்டுநரும் வசதிகள் ஒருங்கிணைப்பாளருமான சண்முகம் பிள்ளை, 41, தன் அன்றாட வேலைக்கு உதவும் திறன்களைக் கற்றுவருகிறார்.
பழக்கமில்லாத ஊர், மாறுபட்ட மக்கள், எதிர்பாராத சவால்கள் எனப் பல தடைகள் இருந்தும் கனவு ஒன்றே குறிக்கோளாகப் பயணம் செய்து ‘ஹே அர்ஜுன்’ எனும் காதல்-கற்பனை பாணியில் படத்தை எடுத்துள்ளனர் உள்ளுர்க் கலைஞர்கள்.
மே தினத்தன்று, தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் உழைப்பை உணர்வுபூர்வமாக வர்ணித்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவுகூரும் கலை இலக்கிய விழா 19ஆம் ஆண்டாக நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் செய்தியாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 40 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய புகழ்பெற்ற தமிழ் ஆளுமை செ.ப.பன்னீர்செல்வத்திற்கு கவிமாலை அமைப்பின் ‘கணையாழி’ விருது வழங்கி கௌர­விக்கப்பட்டுள்ளது.