இந்தியா

ஹைதராபாத்: ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு வருகிற 13ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் - ரஜோரி மக்களவைத் தொகுதிக்கு மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் சிங் யாதவின் மகள் அதிதி சிங் (21), தனது தாய் டிம்பிள் யாதவ் போட்டியிடும் மெயின்புரியில் அம்மாவுக்காக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் முலாயம் சிங் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை உ.பி. அரசியலில் களமிறங்கி உள்ளது
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லி, நொய்டா ஆகிய நகர்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதால் அங்குள்ள பள்ளிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பள்ளிகளில் பாதுகாப்பு கருதி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரத்திலும் இருக்கும் பல பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.