உலகெங்கிலும் உள்ள 10 மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளைப் பற்றி பார்ப்போமா....
1. யானைகள்:
யானைகளுக்கு கிட்டத்தட்ட 5 கிலோ எடையுள்ள மூளை உள்ளது. அவற்றின் மூளை திறனால், அவை தகவல்களைச் சேமித்து பல ஆண்டுகளாக விஷயங்களை நினைவில் வைத்திருக்கும்.
2. பூனைகள்:
ஐபோன் அல்லது ஐபேட் தொலைபேசிகளைவிட பூனைகள் 1,000 மடங்கு அதிக தரவு சேமிப்பிடத்தைக் (data storage) கொண்டுள்ளன.
3. நாய்கள்:
குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் பழகுவதுபோலவே நாய்களும் மனிதர்களுடன் பழகுகின்றன. தன்னை வளர்ப்பவருக்காக உயிரைக்கூட கொடுக்க தயங்காதவை நாய்கள். இவை நன்றி மறவாத விலங்குகள். இவற்றிற்கு மோப்ப சக்தி மிக அதிகம்.
4. குரங்குகள்:
குரங்குகள் குழந்தைகளைப் போலவே புத்திசாலிகள். இவைகளின் செயல்கள் கிட்டதட்ட மனிதர்களைப்போலவே இருக்கும். மனிதர்களைப்போல கைகளால் உணவை எடுத்து உண்ணும்.
5. அணில்கள்:
அணில்கள் தங்கள் உணவுப் பொருள்களை காப்பாற்றுவதற்காக போலிக் குழிகளை உருவாக்கி அங்கே உணவுகள் வைத்திருப்பதுபோல் நாடகமாடி திருடர்களை நம்ப வைக்கும். இது ஒரு சிறிய விலங்கு என்றாலும் இதற்கு புத்திக்கூர்மை மிகுதியாக இருக்கிறது.
6. நீர்நாய்கள்:
நீர்நாய்கள் கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்றாகும். இவைகள் மேஜையில் உட்கார்ந்து சாப்பிடுவது, கோப்பைகளை அடுக்கி வைப்பது, பாறைகளைப் பயன்படுத்தி மட்டிகளைத் திறப்பது போன்ற செயல்களை மனிதர்களைப் போன்று கற்றுக் கொள்கின்றன.
7. பெங்குயின்:
பென்குயின்கள் பனிக்கட்டியில் உறைவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர்ச்சியடையும் இரத்தத்தின் அளவைக் குறைப்பதற்காக, பென்குயின்கள் அவற்றின் கைகால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
தொடர்புடைய செய்திகள்
8. ஓர்காஸ்:
கடல் பாலூட்டிகளில் ஓர்காஸ் இரண்டாவது பெரிய மூளையைக் கொண்டுள்ளது. இதன் மூளை கிட்டத்தட்ட 6.80 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கிறது. ஓர்காஸ் உண்மையில் டால்பின்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம்! இவையும் டால்பின் குடும்பத்தை சேர்ந்த மிகப்பெரிய இனமாகும்.
9. டால்பின்கள்:
டால்ஃபின்கள் ‘கடலின் புத்திசாலிகள்’ என அழைக்கப்படுகின்றன. இவை தனக்குத்தானே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கின்றன. மேலும் இவை தங்கள் அறிவை மற்றவர்களுக்கும் கடத்துகின்றன
10. ஆக்டோபஸ்:
எட்டுக் கைகள், மூன்று இதயங்களை கொண்ட இவை மிகவும் புத்திசாலியாக இருக்கின்றன. ஆக்டோபஸ்கள் வீட்டுப் பூனைகளைப் போலவே புத்திசாலிகள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை ஒரு மனிதனை இன்னொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்தி அறியும் அபாரமான திறனைக் கொண்டுள்ளன.