பாடல், வண்ணப் படங்களுடன் ‘பயில்’வழி ஈடுபாடு

பாடல், வண்ணப் படங்களுடன் ‘பயில்’வழி ஈடுபாடு

1 mins read
4fd57dca-f175-4232-8e9b-5ce48c597c2d
பயிற்சி புத்தகத்தில் வண்ணம் தீட்டும் மாணவர்கள். - படம்: ஹர்ஷவர்த்தினி

விறுவிறுப்பான விளையாட்டுகளின் வழி பாலர் பள்ளி மாணவர்களிடையே தமிழ் மீதான ஆர்வத்தை வளர்க்க ‘பயில் 2026’ நிகழ்ச்சி முற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகக் கட்டடத்தில்  இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

30 மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பயிலரங்கு நிகழ்ச்சி தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக இடம்பெற்றது.

பயிலரங்கில் மாணவர்கள்.
பயிலரங்கில் மாணவர்கள். - படம்: ஹர்ஷவர்த்தினி

பாடல்கள், வண்ணம்தீட்டும் நடவடிக்கைகள் ஆகியவற்றின்மூலம் மாணவர்கள் தமிழ் எழுத்துகளைப் பற்றிக் கற்றுக்கொண்டனர்.

‘ஈடுபாடு’ என்னும் இவ்வாண்டின் தமிழ்மொழி விழாவின் கருப்பொருளுக்கு ஏற்ற விதமாக மாணவர்களுடன் பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

தமிழ் பேசும் வாய்ப்பையும் பிள்ளைகள் பெற்றதோடு புதிய வார்த்தையைக் கற்கவும் அவர்களால் முடிந்ததாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
தமிழ் பேசும் வாய்ப்பையும் பிள்ளைகள் பெற்றதோடு புதிய வார்த்தையைக் கற்கவும் அவர்களால் முடிந்ததாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர். - படம்: ஹர்ஷவர்த்தினி

பெற்றோர் இத்தகைய நிகழ்ச்சிகளில் தங்கள் குழந்தைகளுடன் ஈடுபடும்போது தமிழை எளிமையான முறையில் எப்படிக் கொண்டு சேர்க்கலாம் என்பதைக் கற்றுக்கொள்வார்கள் என்ற நோக்கத்துடன் திருவாட்டி சுடர்மொழி முதலியப்பன் இப்பயிலரங்கை வழிநடத்தினார். 34 வயதான அவர் திட்டப் பொறியாளராகப் பணிபுரிகிறார்.

நிகழ்ச்சியில் தமது பிள்ளையுடன் ஈடுபட்ட 30 வயது இல்லத்தரசி சரண்யா பாபு, இத்தகைய நிகழ்ச்சிகளின்வழி மாணவர்களுக்குத் தமிழில் அதிகம் பேசவும் புதிய வார்த்தைகளைக் கற்கவும் வாய்ப்பு கிடைப்பதாகப் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்