தீபாவளி ஒளியூட்டு 2025

மார்ச் 18ஆம் தேதி அலெக்சாண்ட்ரா சாலையில் மழை பெய்தபோது எடுக்கப்பட்ட படம்.

திடீர் வெள்ள அபாயம்: மேற்கில் இரு இடங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து

Singapore12 minutes ago

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருந்ததால், பொதுமக்கள் அந்த இடங்களைத் தவிர்க்குமாறு பொதுப் பயனீட்டுக் கழகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) மாலை அறிவுறுத்தியது.

எக்ஸ் தளத்தில் கழகம் வெளியிட்ட பதிவுகளில், பின்வரும் இரண்டு பகுதிகளையும் ஒரு மணி நேரத்திற்குத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தியது.

மாலை 6.39 மணி...

தேசிய பல்கலைக்கழகத்தினர் நடத்திய வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில் 300 உயர்நிலை, உயர்கல்வி மாணவர்கள் பங்குபெற்றனர். 

வருங்காலச் சவால்கள்: சண்முகத்துடன் கேள்வி-பதில்

Youth28 minutes ago

வர்த்தகம், திறனாளர்கள், சிந்தனை ஆகியவற்றின் தொடர்பில் சிங்கப்பூர் கொண்டுள்ள திறந்த மனப்போக்கு, அதன் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியமானது என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மாணவர் பொருளியல் மன்றம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் மன்றம் நடத்திய வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில், உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான கா. சண்முகம் பங்கேற்றார். சாத்தம் ஹவுஸ்...

என்டிஐ-என்டியு ஆய்வகத் திறப்பு விழாவில், சிங்கப்பூர் தேசிய பல் மருத்துவ நிலையக் காட்சி அங்கத்தில் செயற்கை பல் மாதிரிகளை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பார்வையிடுகிறார்.

என்டியு-நேனோஃபிலிம் டெக்னாலஜிஸ் $66 மில்லியன் மதிப்பில் ஆய்வகம் திறப்பு

Singapore18 minutes ago

இழந்த பற்களுக்குப் பதிலாக செயற்கைப் பற்களைப் (implant) பொருத்திக்கொள்வோர், இனி விரைவாகக் குணமடையவும் கிருமித்தொற்று அபாயத்தைக் குறைக்கவும் புதிய தொழில்நுட்பம் வழிவகை செய்யவுள்ளது. இதற்காக மேம்படுத்தப்பட்ட மேற்பூச்சு தொழில்நுட்பம் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் கரிமத்தாலான மேற்பூச்சுகள், மனித முடியைவிட ஆயிரம் மடங்கு சிறிதாக இருக்கும். இவை செயற்கைப் பற்களை அதிக...

முரசு மேடை

மலேசியாவில் கடந்த வாரம் பெய்த கனமழையில் மரங்கள் சாய்ந்ததோடு தடுப்புச் சுவர் ஒன்றும் இடிந்தது.

மலேசியாவில் மே மாதம் வரை கனமழை நீடிக்கும் என கணிப்பு

World38 minutes ago

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழை இப்போதைக்கு ஓயாது என்றும் அடுத்த மாதம் வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தற்போதைய வானிலை நிலவரம் இடைப்பருவ மழைக்காலம் முடிவடையும் மே மாதம் வரை தொடரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பருவநிலை ஆய்வாளரும் ஓய்வுபெற்ற...

சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பரபரப்பான சரக்கு மாற்றுத் துறைமுகமான பூசான், 2030ஆம் ஆண்டுக்குள் $373 மில்லியன் மதிப்பிலான, செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒரு உருமாற்றப் பணியைத் தொடங்குகிறது.

பூசானின் ‘ஏஐ’ துறைமுகம் சிங்கப்பூரின் துவாஸ் துறைமுகத்திற்குப் போட்டியாக அமையக்கூடும்

Singapore22 minutes ago

2040ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் துவாஸ் பெருந்துறைமுகம் கட்டி முடிக்கப்படும் நேரத்தில், தென் கொரியாவின் பூசான் துறைமுகமும் முழுமையாகத் தானியங்கி, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு அறிவார்ந்த துறைமுகமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரு துறைமுகங்களும் கட்டி முடிக்கப்படும்போது, ​​அடுத்த தலைமுறை ஆகப் பெரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளும் திறன் கொண்ட 66 கப்பல் நிறுத்துமிடங்கள்...

 ஏப்ரல் 20, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி அதிர்வலைகள், சிங்கப்பூரின் வணிகச் சூழலில் பெரும் தாக்கம்
Play Video

ஏப்ரல் 17, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

டவுன்டௌன், தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை நம்பகத்தன்மை குறைந்தது
Play Video

ஏப்ரல் 16, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video