'குருதி ஆட்டம்', 'பொய்க்கால் குதிரை', 'காட்டேரி', 'விக்டிம்' '6 ஹவர்ஸ்', 'மாயத்திரை', 'துரிதம்', 'கடைசி நொடிகள்', 'சீதா ராமம்' ஆகிய ஒன்பது திரைப்படங்கள் இன்று (ஆகஸ்ட் 5) வெளியீடு காண உள்ளன.
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ளது 'சீதா ராமம்' திரைப் படம். ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் நடித்துள்ளனர்.
தெலுங்கில் தயாராகியுள்ள இப் படம் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இன்று வெளியாகிறது. ஆனால், இப்படத்திற்கு அரபு நாடுகள் தடை விதித்துள்ளன.
மத உணர்வுகளைப் புண்படுத் தும் கருத்துகள் 'சீதா ராமம்' படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறி பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் படத்திற்குத் தடை விதித்துள்ளன.
அரபு நாடுகளில் மலையாள நடிகர்களுக்குத் தனி வரவேற்பு உண்டு. அங்கு லட்சக்கணக்கான மலையாளிகள் வசித்து வருவதால், அங்கு இப்படம் வெளியாகாமல் போனால் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படு கிறது.
இப்படத்தில் ராணுவ அதி காரியாக ராம் என்ற பாத்திரத்தில் துல்கரும் சீதாவாக மிருணாள் தாகூரும் நடித்துள்ளனர்.
கவுதம் மேனன், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பூமிகா உள்ளிட்டோரும் உள்ளனர்.
பாகுபலி நாயகன் பிரபாஸ் இப்படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
படம் குறித்து, நடிகர் பிரபாஸ் பேசியபோது, "சினிமாக்காரனுக்கு திரையரங்குதான் கோயில் போன்றது. என்னதான் வீட்டில் பூஜை அறை இருந்தாலும், கோயி லில் கூட்டம் குறைகிறதா என்ன? திரையரங்குக்கு வந்து படத்தைப் பார்ப்பதுதான் சினிமாவை எப்போதும் வாழவைக்கும். 'சீதா ராமம்' அப்படியொரு படம். இந்தப் படத்தை திரையரங்குக்குச் சென்று தான் பார்க்கவேண்டும்," என கேட்டுக்கொண்டார்.