fontsize: 60% 70% 80% 90%

இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு மஇகாவின் பரிந்துரைகள்

மலேசியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் 12 பரிந்துரைகளை அரசாங்கத்திடம் மஇகா தாக்கல் செய்யவிருக்கிறது.
இம்மாத இறுதிக்குள் அந்தப் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் தாக்கல் செய்யவிருப்பதாக மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறியுள்ளார்.
10-வது மலேசியத் திட்டத்தில் அந்தப் பரிந்துரைகளை சேர்த்துக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை மஇகா கேட்டுக்கொள்ளும் என்றும் திரு சாமிவேலு கூறினார்.
மஇகா மத்திய பணிக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் அந்த பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு மஇகாவின் பரிந்துரைகள்

மலேசியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் 12 பரிந்துரைகளை அரசாங்கத்திடம் மஇகா தாக்கல் செய்யவிருக்கிறது.
இம்மாத இறுதிக்குள் அந்தப் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் தாக்கல் செய்யவிருப்பதாக மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறியுள்ளார்.
10-வது மலேசியத் திட்டத்தில் அந்தப் பரிந்துரைகளை சேர்த்துக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை மஇகா கேட்டுக்கொள்ளும் என்றும் திரு சாமிவேலு கூறினார்.
மஇகா மத்திய பணிக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் அந்த பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டனில் கடுமையான மாணவர் விசா விதிமுறைகள்

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக பிரிட்டன் அறிவித்த சில நாட்களில் புதிய அறிவிப்பு ஒன்றையும் அந்நாடு வெளியிட்டுள்ளது.
மாணவர் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் அலன் ஜான்சன் கூறினார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விசா எண்ணிக்கை குறைக்கப்படவிருப்பதாக அவர் சொன்னார்.
வெளிநாட்டு மாணவர்கள் குடிநுழைவு விதிமுறைகளை மீறாமல் இருக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் திரு ஜான்சன் கூறினார்.

3 ஈரானியர்கள் மலேசியாவில் கைது

மலேசியாவுக்குள் போதைப்பொருள் கடத்திவர முயன்ற 2 பெண்கள் உள்பட மூன்று ஈரானியர்களை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 4 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள போதைப் பொருள் அவர்களின் பயணப் பெட்டிகளுக்குள் இருந்ததாக மலேசிய சுங்கத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
54.54 கிலோ கிராம் போதைப் பொருள் இரு பைகளுக்குள் இருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். அந்த மூவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் துபாயிலிருந்து வந்த அவர்கள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும் சுங்கத்துறை அதிகாரி முகம்மது சுபிரி அவாங் கூறினார்.

3 ஈரானியர்கள் மலேசியாவில் கைது

மலேசியாவுக்குள் போதைப்பொருள் கடத்திவர முயன்ற 2 பெண்கள் உள்பட மூன்று ஈரானியர்களை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 4 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள போதைப் பொருள் அவர்களின் பயணப் பெட்டிகளுக்குள் இருந்ததாக மலேசிய சுங்கத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
54.54 கிலோ கிராம் போதைப் பொருள் இரு பைகளுக்குள் இருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். அந்த மூவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் துபாயிலிருந்து வந்த அவர்கள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும் சுங்கத்துறை அதிகாரி முகம்மது சுபிரி அவாங் கூறினார்.

ஒபாமா வருகைக்கு இந்தோனீசியாவில் வரவேற்பு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தமது குடும்பத்துடன் மார்ச் மாதம் இந்தோனீசியா வரவுள்ளார்.
சிறுவனாக இருந்தபோது 1960-களில் ஜகார்த்தா பள்ளிக்கூடத்தில் படித்தவர் ஒபாமா. அவர் தன் தாயாருடனும் இந்தோனீசிய மாற்றாந் தந்தையுடனும் அங்கு வாழ்ந்திருக்கிறார்.
ஆகவே இந்தோனீசியப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக ஒபாமா ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தோனீசியாவில் உள்ள மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பு ஒன்று ஒபாமா இந்தோனீசியா வரவிருப்பதை வரவேற்பதாகக் கூறியுள்ளது.

ஒபாமா நிர்வாகத்தைச் சாடிய பெலின்

அமெரிக்கத் தேர்தலின்போது குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டவர் திருமதி சாரா பெலின்.
அலஸ்கா முன்னாள் ஆளுநருமான அவர், ஒபாமா நிர்வாகத்தையும் ஒபாமாவின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பற்றியும் குறை கூறினார்.
தேநீர் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பெலின், ஒபாமாவின் 2011-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் அமெரிக்காவின் கடனை அதிகரிக்கச் செய்யும் என்று கூறினார்.

பிரியஸ் கார்களை டொயோட்டா திரும்பப் பெறும்

டொயோட்டா இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்திய பிரியஸ் கார்களின் பிரேக் வடிவமைப்பில் கோளாறு இருப்பதை ஒப்புக்கொண்ட பிறகு அந்நிறுவனம் அந்த வகை கார்களை திரும்பப் பெற்றுக்கொள்ள விருக்கிறது.
இந்த வாரம் 300,000 பிரியஸ் கார்களை திரும்பப் பெற்றுக்கொள்ள விருப்பதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

குறைந்த சம்பளம் பெறுவோரை மேம்படுத்த உதவித் திட்டங்கள்: அரசு ஆராய்கிறது

குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தங்கள் திறன்களை மேம்படுத்தி நல்ல சம்பளம் தரும் வேலைகளில் சேர்வதைச் சுலபமாக்கும் உதவித் திட்டங்களை எதிர்பார்க்கலாம்.
அதோடு, வேலைநலன் துணை வருமானத் திட்டத்திலிருந்து (WIS) மேலும் பல அனுகூலங்களையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். இந்த மூன்றாண்டுகால துணை வருமானத் திட்டத்தின் வழங்கீடுகள், தகுதி விதிகள் ஆகியவற்றை அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருகிறது.
பொருளியல் உத்திகள் குழுவின் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்தில் நீ சூன் சென்ட்ரலுக்கு நேற்று வருகையளித்த மனிதவள அமைச்சர் கான் கிம் யோங், பரிந்துரைகள் பற்றி மக்களுடன் கலந்துரையாடினார்.

இந்தியப் பெண் தயாரிப்பில் சத்தமில்லாத புதிய மின் சைக்கிள்

- தமிழவேல் -
கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமது மோட்டார் சைக்கிளில்தான் செய்தித்தாள் விநியோகம் செய்து வருகிறார் திரு பாலகிருஷ்ணன் ரகுராமன்.
அதிகாலையிலேயே மோட்டார் சைக்கிள் கிளப்பும் ஓசை தங்களைத் தொந்தரவு செய்து தூக்கத்தைக் கலைக்கிறது என்று பலர் அவரிடம் புகார் கொடுத்து வந்துள்ளனர்.
ஆனால் ஐந்து மாதங்களாக அந்த பிரச்சினையே இல்லை.
அவரின் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் அதிகாலையில் சத்தமின்றி நிம்மதியாக உறங்குகிறார்கள்.
அதற்கு தமது புதிய மின் சைக்கிளே காரணம் என்றார் 42 வயது திரு ரகுராமன்.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838