நடிகர் துல்கர் சல்மான் தனது ‘கிங் ஆப் கோதா’ படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார். படம் ஓணம் பண்டிகையின்போது வெளியீடாக உள்ளது.
இந்நிலையில், முதன்முறையாக பிரபல பாலிவுட், பஞ்சாபி பாடகியான ஜேஸ்லின் ராயல் என்பவருடன் ஹீரியா என்கிற இசை ஆல்பத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார் துல்கர் சல்மான்.
இந்த இசை ஆல்பம் குறித்து தொடர்ந்து விளம்பரப்படுத்துவதற்கு நித்யா மேனன் அல்லது மிருணாள் தாக்கூர் இவர்களில் யாரை அணுகுவீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் மிருணாள் தாக்கூர் என்று பதிலளித்தார் துல்கர் சல்மான். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
காரணம், கடந்த பத்து வருடங்களில் துல்கருடன் நித்யா மேனன் கதாநாயகியாக மூன்று படங்களில் நடித்துள்ளார். மிருணாள் தாக்கூர் ‘சீதாராமம்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் துல்கருடன் இணைந்து நடித்துள்ளார். அதனால் நித்யா மேனன் பெயரைத்தான் அவர் சொல்வார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள துல்கர் சல்மான், “சீதாராமம்’ திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படம். அந்தப் படம் நான் கனவு கண்டதை விடவும் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அது ஒரு ஐகானிக் படம்,” என்று கூறியுள்ளார்.