‘தனி ஒருவன்’ பிரபாஸ் நடிக்க இருந்த கதை

‘தனி ஒருவன்’ படத்தின் கதையை நடிகர் பிரபாஸை மனதில் வைத்து தாம் எழுதியதாகக் கூறியுள்ளார் இயக்குநர் மோகன்ராஜா.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்தக் கதையை பிரபாஸிடம் கூறியதாகவும் அச்சமயம் காதல் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாக அவர் தம்மிடம் தெரிவித்ததாகவும் மோகன்ராஜா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“அந்தச் சமயத்தில் பிரபாஸுடன் இணைந்து ஒரு காதல் படத்தை உருவாக்கி இருந்தால் இன்று நான் வேறொரு உயரத்தில் இருந்திருப்பேன். எனினும், காதல் படங்களைவிட காவல்துறை தொடர்பான கதைகளில்தான் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது என்பதை புரிந்துகொள்ள அந்தக் காலகட்டம் உதவியது.

“பிரபாஸுக்கு ஏற்ற காதல் கதைகள் இல்லாததால் விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கினேன்,” என்று மோகன்ராஜா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியை வைத்து இவர் இயக்கிய ‘தனி ஒருவன்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!