லாரன்ஸ் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா

ராகவா லாரன்சுடன் இணைந்து நடிக்கவிருந்த படத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார் நயன்தாரா.

அண்மையில் லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘சந்திரமுகி 2’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், அடுத்து ‘ஜிகிர்தண்டா 2’ படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ள கதையில், ‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ராகவா லாரன்ஸ்.

இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருந்தார். மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா தரப்பில் இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் ‘சந்திரமுகி 2’ பட வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததே அவரது விலகலுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து வேறொரு நாயகியை ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும், இயக்குநர் ரத்னகுமார் கதையையும் சற்று மாற்றி வருவதாகத் தகவல். எனினும் ராகவா லாரன்ஸ்தான் நாயகன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!