நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் 10 நாட்களில் உலகளவில் 500 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நேரு உள்விளையாட்டு அரங்கில், ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டது. அதன்படி, படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்திற்கு அனுமதி வழங்க விண்ணப்பித்திருந்தார்.
அதில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவை வரும் நவம்பர் 1ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் கொண்டாட இருக்கிறோம். விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். எனவே பாதுகாப்பு வழங்குமாறு கடிதம் அனுப்பி இருந்தார்.
பல்வேறு நிபந்தனைகளுடன் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு காவல்துறை அனுமதியளித்துள்ளது. 200க்கும் மேற்பட்ட கார் போன்ற வாகனங்கள் வரலாம், பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என நிபந்தனை விதித்துள்ளது.