காதலித்து திருமணம் செய்வேன்: ஸ்ரீ திவ்யா

காதல் திருமணத்தை ஆதரிப்பதாகச் சொல்கிறார் நடிகை ஸ்ரீ திவ்யா.

அண்மைய பேட்டியில் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

“என்னுடைய முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. நிச்சயமாக ஒருவரைக் காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன்.

“என்னுடைய காதலர் யார், எப்போது திருமணம் என்று கேள்விகளை அடுக்கினால் அவற்றுக்குத் தற்போது பதில் சொல்ல இயலாது. உரிய நேரம் வரும்போது அனைத்து விவரங்களையும் வெளியிடுவேன்,” என்று ஸ்ரீ திவ்யா தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தில் அறிமுகமான இவர், பின்னர் ‘காக்கி சட்டை’, ‘ஜீவா’, ‘ஈட்டி’, ‘மருது’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் எந்தப் படத்திலும் தலைகாட்டவில்லை. இந்நிலையில், விக்ரம் பிரபுவுடன் ‘ரெய்டு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறும் ஸ்ரீ திவ்யாவுக்கு, இரண்டு புதுப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!