‘திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களுக்குப் பிறகு ரிஷி ரிச்சர்ட் நாயகனாக நடிக்கும் படம் ‘சில நொடிகளில்’.
மலேசியாவில் வசிக்கும் நடிகையும் ஆர்.ஜே.வுமான ‘புன்னகை பூ’ கீதா, இந்தப் படம் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார்.
கன்னட இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கி உள்ள இப்படத்தில் யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழு படமும் லண்டனில் தயாராகி உள்ளது.
கதைப்படி லண்டனில் மருத்துவராகப் பணியாற்றுகிறார் நாயகன் ரிஷி. அவரது தோழி யாஷிகா ஆனந்த் அளவுக்கு அதிகமான போதை மருந்து உட்கொண்டு உயிரிழக்கிறார். இதனால் ரிச்சர்ட்டின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிறது.
இதன் பின்னால் இருக்கும் மர்மங்களை அவர் எவ்வாறு கண்டறிகிறார் என்பதுதான் கதையாம்.