‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் நாயகியாக நடித்திருந்த நிமிஷா சஜயன் அவ்வளவாக அழகு இல்லை என்று சொன்னதற்கு அழகு என்பது நிறத்தைப் பொறுத்தது அல்ல என்று விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் இந்தப் படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இயக்குநநர் கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர் சந்திப்பில், “சித்தா படத்தில் நடிகை நிமிஷா சஜயன் சிறப்பாக நடித்திருப்பார். அவர் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றாலும் அவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தில் அவரைத் தேர்வு செய்ததற்கு காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “அவர்கள் அழகாக இல்லை என்று நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள்? அது உங்கள் மனநிலை, நீங்கள் அழகு என்றால் சில வரையறை வைத்திருக்கிறீர்கள்போல் தெரிகிறது,” என்று நிறம் குறித்து கேள்வி எழுப்பிய நிருபருக்கு பதிலடி கொடுத்தார் இயக்குநர்.