‘கோ’ படத்தின் நாயகி கார்த்திகா ஞாயிற்றுக்கிழமை மும்பை தொழில் அதிபர் ரோஹித்தை திருமணம் செய்துகொண்டார்.
தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதா. இவருக்கு கார்த்திகா, துளசி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
கார்த்திகா தமிழில் ஜீவா ஜோடியாக ‘கோ’ படத்தில் அறிமுகமானார். அருண் விஜய்யுடன் ‘வா டீல்’, பாரதிராஜா இயக்கிய ‘அன்னக்கொடி’, விஜய்சேதுபதியுடன் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இவரும் மும்பை தொழில் அதிபர் ரோஹித் என்பவரும் காதலித்தனர். அண்மையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்ட கார்த்திகா, “உன்னை சந்திக்க வேண்டும் என்பது விதி. உன்னுடன் சேர்ந்து பயணிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது,’’ என்ற பதிவையும் பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் கார்த்திகா-ரோஹித் திருமணம் திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று வாழ்த்தினர்.