22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வசீகரா’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் ‘கோட்’ படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அண்மையில் விருது வழங்கும் விழா ஒன்றில் பகிர்ந்து கொண்டார் சினேகா.
அப்போது பேசிய சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா “இதற்கு முன்னதாக, வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணியாக நடிப்பதற்கு சினேகாவிற்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சினேகா மறுத்துவிட்டார்.
“அது நல்ல முடிவு என்று நான் அப்போதே பாராட்டினேன். அப்போது அந்த முடிவை எடுத்ததால்தான் இப்போது விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது,” என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.