ஆங்கிலப் படங்களில் நடித்திருக்கும் இந்தோனேஷிய நடிகை செல்சீயை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க இருக்கிறார் பிரபல இயக்குநர் ராஜமௌலி.
இயக்குநர் ராஜமௌலி, ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை அடுத்து மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படம் ‘இண்டியானா ஜோன்ஸ்’ பாணியில் இருக்கும் என்றும் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமௌலி ஏற்கெனவே கூறியிருந்தார். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாகும் என்றும் ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதில் மகேஷ்பாபுக்கு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை செல்சீ இஸ்லன் நடிக்க உள்ளாராம். அண்மையில் அவரைப் பல கோணங்களில் படம் பிடித்து இருப்பதாகவும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
‘ஆர்ஆர்ஆர்’ படம் ஆஸ்கர் வென்றதால், அனைத்துலக அளவில் ராஜமௌலி பிரபலமாகியுள்ளார். அதனாலேயே ஆங்கில படங்களில் நடித்துள்ள செல்சீயை தேர்வு செய்துள்ளாராம். இதில் மற்றொரு நாயகியாக திஷா பதானி நடிக்கலாம் என கூறப்படுகிறது. இவர், சூர்யாவுடன் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார்.