பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது என்றும் யார் மூலமாக உதவுவது என்பதுதான் தெரிவதில்லை என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
தன்னார்வலர்கள் 25 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ள அவர், பலரிடம் பணம் இருந்தாலும் அதை வைத்து உதவி செய்வதற்கு நேரம் இல்லை என்றார்.
கார்த்தி இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இதையொட்டி ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்போவதாக அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, அண்மையில் அவரது ரசிகர்கள் அன்ன தானம் வழங்கினர். கார்த்தி தன் கையால் பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
“தங்களுடைய பொன்னான நேரத்தைச் செலவிட்டு, உதவி தேவைப்படுவோரை தேடிச் சென்று உதவும் தன்னார்வலர்கள் பலர் உள்ளனர். அவர்களை இச்சமூகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
“இதன் மூலம் இந்த தன்னார்வலர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வசதி படைத்தவர்களுக்கு இவர்களைப்பற்றி தெரிய வரும். இதன் மூலம் பிறர்க்கு உதவும் பணி மேலும் சிறக்கும்,”- என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.