இந்தியத் திரையுலகின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவனுக்கு அனைத்துலக விருது கிடைத்துள்ளது.
உலக அளவில் திரையுலகுக்கு ஒளிப்பதிவு மூலம் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு ‘பியர் ஆஞ்சனியூஸ்’ என்ற விருது வழங்கப்படுகிறது.
வரும் மே 24ஆம் தேதி பிரான்சில் நடக்கும் ‘கான்’ திரைப்பட விழாவில் அவருக்கு விருது வழங்கப்படும்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் என்பது கவனிக்கத்தக்கது.