விமானத்திலேயே சிறுநீர், மலம் கழித்த ஆடவர் கைது

புதுடெல்லி: விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதன் தளத்திலேயே ஆடவர் ஒருவர் சிறுநீர், மலம் கழித்ததாகக் கூறி சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வு இம்மாதம் 24ஆம் தேதி மும்பை-புதுடெல்லி இடையிலான ஏர் இந்தியா விமானத்தில் நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

ராம் சிங் என்ற அப்பயணிக்கு இருக்கை எண் ‘17எஃப்’ ஒதுக்கப்பட்டிருந்தது என்றும் அவர் இருக்கை வரிசை 9இல் சிறுநீர், மலம் கழித்து, காறி உமிழ்ந்தார் என்றும் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

இத்தகாத செயலைக் கண்ட விமானப் பணியாளர், அவ்வாறு செய்தால் மற்றப் பயணிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்படலாம் என்று ராம் சிங்கை எச்சரித்தார்.

ராம் சிங்கின் செயல் மற்றப் பயணிகளை முகம் சுளிக்க வைத்தது.

விமானிக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் உடனடியாக ஏர் இந்தியா நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து, விமானம் தரையிறங்கியதும் ராம் சிங்கை அழைத்துச் செல்ல பாதுகாவலர்கள் தயார்நிலையில் இருந்தனர்.

விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் ராம் சிங் உள்ளூர்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒப்படைக்கப்பட்டார். அவர்மீது இரண்டு சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அருவருக்கத்தக்க செயலின்போது ராம் சிங் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!