அனைத்துலக, தேசிய விருதுகள் வென்ற 12 வயது இயக்குநர் ஆஷிக் ஜினு, இயக்கியுள்ள ஈ.வி.ஏ. என்ற போதை விழிப்புணர்வு குறித்த வணிக ரீதியிலான படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
30 நாட்களில் ஆஷிக் இயக்கியிருக்கும் இப்படத்தின் சுவரோட்டி, முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியிடப்பட்டன.
இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த ஆஷிக் இயக்கிய முதல் படமான ‘பிடிகா’ என்ற குறும்படம் கேரளாவின் மிகச்சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்திய படம்.
அடுத்து, இவர் இயக்கிய ‘பசி’ குறும்படம், 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த குறும்பட இயக்குநர் என்ற விருதை இவருக்குப் பெற்றுக்கொடுத்தது.
இதுவரையில் ஆறு குறும்படங்கள், ஒரு ஆவணப்படத்தை இயக்கி இருக்கும் ஆஷிக்கின் ஆசை, நடிகர் அஜீத்தை இயக்க வேண்டும் என்பதுதான்.