பெங்களூரு: கர்நாடகாவில் கண்தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 15 நாள்களில் மட்டும் சுமார் ஆறாயிரம் பேர் கண்தானம் செய்துள்ளனர்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்குப் பிறகு உடல் உறுப்பு தானம் குறித்து கர்நாடகாவின் கிராமப்புறப் பகுதிகளிலும்கூட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இறக்கும் முன்பே தமது கண்களை தானம் செய்வதாக புனித் ராஜ்குமார் அறிவித்திருந்தார்.
இறந்த பிறகு அவரது இரு கண்களைக் கொண்டு நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர்களுக்குப் பார்வை கிடைத்துள்ளது.
இதுகுறித்து கேள்விப்பட்ட இளம் ரசிகர்கள் பலர் தங்கள் அபிமான நடிகரைப் பின்பற்ற கண்தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த 15 நாள்களில் மட்டும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண் தானம் செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.