பிரதமரை விமர்சித்த விவகாரம்: பிணை கிடைத்தும் கைதான எம்.எல்.ஏ ஜிக்னேஷ்

கவுகாத்தி: பிர­த­மர் நரேந்­திர மோடியை விமர்­சித்த 'டுவிட் பதிவு' வழக்­கில் குஜ­ராத் சுயேட்சை எம்­எல்ஏ ஜிக்­னேஷ் மேவா­னி­யின்(படம்) பிணை மனு மீதான தீர்ப்பில் அசாம் நீதி­மன்­றம் நேற்று அவ­ருக்குப் பிணை வழங்கி உத்­த­ர­விட்­டது.

இந்த நிலை­யில் ஜிக்­னேஷ் மேவா­னியைக் கைது செய்ய வந்த அசா­மின் பர்­பேட்­டா­வைச் சேர்ந்த காவல்துறையினர், அவர் எந்த வழக்­கில் மீண்­டும் கைது செய்­யப்­பட்­டார் என்­பதை இது­வரை தெரி­விக்­க­வில்லை.

அசா­மின் கோக்­ர­ஜ­ரைச் சேர்ந்த உள்­ளூர் பாஜக தலை­வர் ஒரு­வர் ஜிக்­னேஷ் மேவா­னிக்கு எதி­ராக புகார் அளித்­ததை அடுத்து, குஜ­ராத்­தின் பலன்­பூ­ரில் அசாம் காவல்­துறை முத­லில் அவரை கைது செய்­தது.

இது தொடர்­பாக பேசிய ஜிக்­னேஷ் மேவானி, "இது பாஜக மற்­றும் ஆர்­எஸ்­எஸ்­ஸின் சதி. எனது நற்­பெ­ய­ருக்கு களங்­கம் விளை­விப்­ப­தற்­காக இதை திட்­ட­மிட்­டுச் செய்து வரு­கின்­ற­னர். ரோகித் வெமு­லா­வுக்­குச் செய்­தார்­கள், சந்­தி­ர­சே­கர் ஆசாத்­துக்­குச் செய்­தார்­கள், இப்­போது என்­னைக் குறி­வைக்­கி­றார்­கள்," என்று கூறி­னார். ஜிக்­னேஷ் மீது சதி, வழி­பாட்­டுத் தலங்­கள் தொடர்­பான குற்­றம், சமய உணர்­வு­க­ளைத் தூண்­டு­தல் மற்­றும் அமை­திக்கு குந்­த­கம் விளை­வித்தல் ஆகிய பிரி­வு­க­ளின் கீழ் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!