ஸ்ரீநகர்: உலகின் ஆக உயரமான போர்முனை என்று குறிப்பிடப்படும் சியாச்சின் பனிச்சிகரப் பகுதியில் முதன் முறையாக சிவா சௌஹான் என்ற பெண் அதிகாரி (படம்) பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அங்கு குறிப்பிட்ட ஒரு பகுதியில் அவர் இந்திய ராணுவத்துக்கு தலைமை வகிப்பார் என்றும் அவர் ராணுவ பொறியியல் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவா சௌஹான் 11 வயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்டவர். அதன் பின்னர் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய அவர், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்.
சியாச்சின் சிகரத்தில் பணிபுரியும் முதல் பெண் ராணுவ அதிகாரியான அவருக்கு மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சியாச்சின் பனிச்சிகரமானது சுமார் 20 ஆயிரம் அடி உயரம் உடையது.