மதுபானக் கொள்கை வழக்கு: அரசு சாட்சியாக மாறிய தொழிலதிபர்

புது­டெல்லி: டெல்லி அர­சின் மது­பா­னக் கொள்கை முறை­கேடு தொடர்­பான வழக்­கில், குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள தொழில் அ­தி­பர் ஷரத் சந்­திரா ரெட்டி, அரசு தரப்பு சாட்­சி­யாக மாறி­யுள்­ளார்.

இத­னால் இந்த வழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவின் மக­ளான கவி­தா­வுக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

ஐத­ரா­பாத்­தைச் சேர்ந்த ஷரத் சந்­திரா ரெட்டி, அரசு சாட்­சி­யாக மாறு­வ­தற்கு டெல்லி நீதி­மன்­றம் கடந்த வியா­ழக்­கி­ழமை அனு­மதி வழங்­கி­யது.

இது தொடர்­பாக அவ­ரது வழக்­க­றி­ஞர் மூலம் தாக்­கல் செய்­யப்­பட்ட மனுவை பரி­சீ­லனைக்கு ஏற்­றுக்­கொண்­ட­தா­க­வும் அதன் முடி­வில் அவ­ரது கோரிக்கை ஏற்­கப்­பட்­ட­தா­க­வும் டெல்லி நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

டெல்லி மாநில அர­சின் மது­பா­னக் கொள்­கை­யால் அர­சுக்கு பெரும் வரு­வாய் இழப்பு ஏற்­பட்­ட­தாக அம­லாக்­கத்­துறை குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

இந்த முறை­கேடு தொடர்­பாக ஷரத் சந்­திரா ரெட்டி உள்­ளிட்ட தொழி­ல­தி­பர்­கள் பல­ன­டைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

முன்­ன­தாக, இதே வழக்­கில் டெல்லி முன்­னாள் துணை முதல்­வர் மணீஷ் சிசோ­டியா கைதாகி உள்­ளார்.

இந்நிலையில், ஷரத் சந்திரா ரெட்டி திடீரென அரசு சாட்சியாக மாறியிருப்பது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தெலுங்கானா முதல்வர் மகள் கவிதாவுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!