கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
விஜயபுரா, பாகல்கோட்ட மாவட்டங்களில் நடந்த அந்தச் சோதனையில் 20 அதிகாரிகள் தனித்தனியாக ஈடுபட்டனர்.
இதில் கே.ஆர்.புரா வட்டாட்சியர் அஜித் ராய் என்பவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து சொத்துப் பத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.